பயணங்கள் முடிவதில்லை


ஜனனம்!
மரணம்
இவை இரண்டிற்குள் நடப்பது வாழ்க்கை பயணம்

கருவாகி
உருவாகி
ஜனிப்பது பயணத்தின் தொடக்கம்
பின்னர்
தவழ்வது ஓர் பயணம்

தவழ்ந்த பிறகு

நடை பயில்வது ஓர் பயணம்
வளர்ந்து வாலிபனாக
வண்ண கனவுகளோடு வலம் வருவது ஓர் பயணம்

வாழ்க்கை துணைவியை கையில் பிடித்து கொண்டு
வலம் வருவது ஓர் பயணம்
மறுபடியும் ஜனனம்
அந்த ஜனனத்தின் மூலம் தொடரும் பந்தங்கள்

தொடர்ந்த பந்தங்கள் தான்
பின்னாளில் இறுதி பயணத்தில்
தொடரும் தீப்பந்தமாகின்றன

ஆம் பயணங்கள் முடிவதில்லை
வாழ்க்கை பயணங்கள் முடிவதில்லை

4 கருத்துகள்:

Aprajitha சொன்னது…

வளர்ந்து வாலிபனாக
வண்ண கனவுகளோடு வலம் வருவது ஓர் பயணம்

Kavithai is good. valibargali mattum kuripitu irupadhu varuthathai alikiradhu... :-(

Unknown சொன்னது…

You have written a very good poetry about life.

Hope to see more verses.

Unknown சொன்னது…

தொடர்ந்த பந்தங்கள் தான்
பின்னாளில் இறுதி பயணத்தில்
தொடரும் தீப்பந்தமாகின்றன

Poem is nice.. Continue ur பயணம்..

பெயரில்லா சொன்னது…

valthukal...