
தொலைந்த இடத்தில் தேடிக்கொண்டு இருக்கிறேன்
என்று நினைத்தேன்
பிறகு தான் புரிந்தது
தொலைந்த இடத்தையே தேடிக்கொண்டு இருக்கிறேன்.
தொலைந்தது எதுவென்றே புரியாமல்
தேடி கொண்டு இருக்கிறேன் என்று
பிறகு தான் புரிந்தது
தேடலின் எல்லையை தொட்டுவிட்டேன் என்று நினைத்தேன்
எல்லையே இல்லையென்பது பிறகு தான் புரிந்தது
இதுதான் தேடலின் தொல்லை