ஆழி பேரலையீன் அழியாத சுவடுகள்



நீலக் கடலோரம் நிம்மதியாக வாழ்கிறீர்கள் என நினைத்தோம்
சுனாமியின் சுழல் உங்கள் வாழ்க்கையை சுழற்றிவிட்டது

மீன் பிடிக்க சென்றீர்கள் என்று இருந்தோம்
இப்படி
மீளாமல் மாய்ந்து விடுவீர்கள் என்று எண்ண வில்லை

நில அதிர்வுகளை மதிப்பிட ரிக்டர் அளவுகோல்
என்னும் கருவியை விஞ்ஞானம்கண்டுபிடித்தது,
எங்கள் மன அதிர்வுகளை மதிப்பிட மெய்ஞானத்தாலும் முடியவில்லை

உருக்குலைந்தது உங்கள் உடல்கள் மட்டுமல்ல
எங்களது உள்ளமுமே

உற்றார் உறவினர்களை இழந்து விட்டீர்கள்
உடமைகளை இழந்து விட்டீர்கள்
ஆனால் ஒன்று மட்டும் கலங்காமல் நிமிர்ந்து நிற்கின்றது
ஆம்

அது தான் கலங்கரை விளக்கம்!!!

இல்லை இல்லை !!!
அது தான் உங்கள் மன உறுதி அதில் தான் காண்கிறோம்
எங்கள் மனித நேயம் !